Saturday, March 1, 2014

முல்லைத்தீவு மாணிக்கபுரம் மக்களை கொச்சைப்படுத்தும் கழுகுகண்

விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் யுத்தத்தின் போது இறந்த தம் உறவுகளுக்கு மரணச் சான்றிதழ் பெற முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் புலி உறுப்பினர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவரும் தற்போது ஒட்டுக்குழுவுடன் இணைந்து செயற்படுபவருமான இசை ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.

வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர் கழுகுகண் என்ற பெயரில் இவர் இதனை சில இணையங்கள் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். அரசியல் வாதிகளுடன் திரியும் இவர் மக்களை வைத்து அரசியல் செய்யும் முகமாக இவ்வாறு செயற்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதுவுக்கு அடிமைப்பட்டும் பணத்துக்கு ஆசைப்பட்டும் தான் இவ்லாறு மரணச் சான்றிதழ்களை மக்கள் பெற முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்களை விழிப்பாக இருக்குமாறும் மாணிக்கபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com