போர் நடைபெற்ற பிரதேசங்களில் காணப்படும் இனந்தெரியாத பொருட்களை தொட வேண்டாம் – இராணுவப் பேச்சாளர்!
போர் நடைபெற்ற வலயங்களில் காணப்படும் சந்தேகத்திற்கு இடமான அல்லது இனந்தெரியாத பொருட்களை கண்டால் அவற்றை தொடாது உடனடியாக அது தொடர்பில் அருகில் உள்ள பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் காணப்படும் இவ்வாறான பொருட்களை தொடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று கிளிநொச்சியில் இவ்வாறான மர்மப் பொருள் ஒன்றை எடுத்த போது நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment