Wednesday, March 26, 2014

எல்.ரி.ரி.ஈ யினால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கைவிடப்பட்ட காணிகள் மீண்டும் உரிமை யாளர்களிடம் கையளிக்கப்பட்டது. விடுதலை புலிகளினால் குறித்த காணிகள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது இக்காணிகள் படையினரால் மீட்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தலைமையில் இக்காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காணி உரிமையாளர்களில் அநேகமானோர் தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்றனர். விடுதலை புலிகளால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இக்காணிகள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இக்காணிகளை கையளிக்கும் வைபவம் கிளிநொச்சி சமூக ஒத்துழைப்பு நிலையத்தில் நடைபெற்றதுடன் முதல் கட்டமாக 21 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com