Saturday, March 29, 2014

மனித உரிமைகள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க பிள்ளைக்கு அதிகாரம்!

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் வெற்றிகண்டுள்ள பிரேரணை தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஓர் ஆண்டுக்குள் அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.

நவநீதம்பிள்ளையினால் அவ்வாய்வறிக்கையை தயார்செய்வதற்கு, அவருக்குத் துணையாக துறைசார் வல்லுநர்கள் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக ஜெனீவா செய்திகள் அறிவிக்கின்றன.

எதுஎவ்வாறாயினும், அக்குழுவினர் இலங்கைக்கு வருவதாயின் இலங்கை அரசாங்கத்திடமிருந்து விசாபெற்றுத்தான் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com