Friday, March 28, 2014

பேஸ்புக் பிரச்சாரத்தை எங்களால் நிறுத்த முடியாது! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் இன்றுவரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

முழுமையான தேர்தல் பிரச்சாரங்களும்,.அதுசார்ந்த விடயங்களும் நேற்று முன்தினம் நல்லிரவு 12.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டபோதும், சமூக வலைத்தளங்களின் மூலம் அது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு சட்ட ரீதியாக இதற்கு எதிராகச் செயற்பட முடியாது. பேஸ்புக் தொடர்பில் எங்களுக்கு தேர்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் செயற்பட முடியாது. அந்த சமூக வலைத்தளங்களினூடான பிரச்சாரங்களை, அதுதொடர்பில் சட்டம் பிறப்பித்தால் மட்டுந்தான் நிறுத்த முடியும். குறுஞ்செய்திகள் விடயத்திலும் இப்படித்தான்” என்றும் அவர் மேலும் கருத்துரைத்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com