வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்!
புத்தளம் - அடச்சல்தீவு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அரளி விதை உண்ட உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது குறித்த இவ்விருவரும் காதலித்து வந்ததுடன் வீட்டுக்கு இவர்களுடைய காதல் சம்பவம் தெரியவந்ததுடன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் அண்மையில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சில நாட்களின் பின் குறித்த 14 வயது சிறுமி தனது வீட்டுக்கு மீண்டும் வந்த போது சிறுமியின் பெற்றறோர் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்ததை அடுத்து மனவேதனையில் இருவரும் அரளி விதை உட்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
0 comments :
Post a Comment