Monday, March 24, 2014

புலிகள் மீண்டும் தலைதூக்க மாட்டார்கள்! இராணுவம் சொல்வது பொய்!! - வாசு

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வடக்கினை மையப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றது என்று கூறிப்பிடப்படுகின்ற கதை வெறும் வாய்ப்பேச்சே என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

தமிழ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர், இராணுவ மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர்கள் நேற்று முன்தினம் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தான் ஆச்சரியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான கூற்றுக்களால் ஜெனீவாவில் இந்நாட்களில் நடைபெறும் எமது நாட்டுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் பலம் பெருமே தவிர, இதனால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனக் குறிப்பிடுகின்ற அவர், வடக்கில் ஆரம்பமாகியுள்ள புதிய புலிகள் பற்றி இவ்வாறு தேடிக் கொண்டிருப்பதால் அங்கு சாதாரண பொதுமக்கள் மீண்டும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comments :

Arya ,  March 27, 2014 at 10:33 PM  

Are you a Military or intelliagent specialist ? just a Minister, and this ministry also you had begged from President mahinda, better you Need Keep your mouth with a Limit.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com