Monday, March 17, 2014

இரும்புக்கு பதில் தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகளுடன் பிரகாசிக்கும் சிவனொளிபாத மலை!

சிவனொளிபாதமலையிலுள்ள இரும்பு வேலிகளை அகற்றி அதற்கு பதிலாக தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (16.03.2014) சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் நடைபெற்றது. 


தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள் நல்லதண்ணி, கல்ப்பருக்ச விகாரையிலிருந்து சிவனொளிபாதமலை உச்சிக்கு யாத்திரிகர்கள் மூலமாகவும் பொலிஸார் மூலமாகவும் கொண்டு வந்து பொருத்தப்பட்டன. 

இதற்காக கடந்த சில நாட்களாக விசேட பூஜைகள் நடைபெற்றதோடு செங்கல் மற்றும் ஏனைய பொருட்களால் கட்டப்பட்ட மதில்களை அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக கருங்கல் மூலம் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com