Wednesday, March 26, 2014

யாழில் இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் அஞ்ச வேண்டியதில்லை!

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லையென, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அழிந்து போன எல்.ரி.ரி.ஈ யினருக்கு மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டோம். இதனை நாம் தெளிவாக கூறுகின்றோம். தேசிய பாதுகாப்பிற்கு நாட்டில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அடுத்ததாகவே, ஏனைய விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படும்.

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க எவரும் முயற்சித்தால், பொது மக்கள் அதுபற்றி தமது பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் அல்லது பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். நாம் அவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com