Saturday, March 1, 2014

பல்கலை.தேர்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி இனி விரிவரையாளர்களுக்கும்...(?)

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சியில் இனி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்று துணைவேந்தர்களின் மன்றத்திற்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவிரையாளர்கள் சிலரினாலேயே இந்தப் பிரேரணை துணைவேந்தர்களின் மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் துணைவேந்தர்கள் ஆராய்ந்து உயர்கல்வியமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

தலைமைத்துவப் பயிற்சி பல்கலைக்கழக மாணவர்களிடையே பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், அவர்களுடன் செயற்படும் விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டின், விரிவுரையாளர்களும் தலைமைத்துவப் பயிற்சியில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தினாலேயே தாங்கள் இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com