Monday, March 31, 2014

இம்முறை படித்தவர்கள் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்டுள்ளனர்! - ஞானசாரர்

அரசியல்வாதிகள் மத்தியில் புதிய சிந்தனைகள் ஏற்பட வேண்டுமென்ற செய்தியை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் ஊடாக மக்கள் வழங்கியுள்ளனர் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில்லை. தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் மக்களால் அரசியல்வாதிகளை சந்திக்க முடியாது. தாம் கூட்டங்களில் இருப்பதாகவே கூறுவார்கள். அத்தோடு மக்களின் தேவைகள் தொடர்பாக தேடிப் பார்ப்பதில்லை.

இம்முறை தேர்தலில் படித்தவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அரசியல்வாதிகள் புதிதாக சிந்திக்க வேண்டுமென்ற செய்தியை வழங்கியுள்ளனர் என்றும் தேரர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com