Wednesday, March 12, 2014

தமிழ் இனத்தின் காவலர்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை அச்சிட உதவிய கோபியை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை:

சுவிஸ் சந்தோஸ்சின் உதவியாளாம்..

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக புகைப்படத்தில் இருக்கின்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு அவசியமாகவுள்ளதால் அவர் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.

முழுப் பெயர்:- கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் (வயது-31).

உடல் அமைப்பு:- பொது நிற தோற்றத்தைக் கொண்டவர்.

உயரம்:- 06 அடி.

அடையாளம்:- இவரது இடதுபக்க உதட்டின் மேல் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது.

இவர் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கப்பெற்றால் 011-2451636 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 011-2321838 என்ற பெக்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவலைத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் திணைக்களம் தகவல் தருபவர் பற்றிய இரகசியம் காக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் இனத்தின் காவலர்கள் என்னும் பெயரில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தமை தொடர்பில் கடந்த வாரம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை சுவிஸ்சில் இருந்து முன்னாள் புலி உறுப்பினர் சந்தோஸ் பணம் கொடுத்து இயக்கியதாகவும் எமது இணையம் முன்னர் செய்தி வெளியிட்டு இருந்தது. அதனடிப்படையில் சந்தோஸ் அவர்களுக்கு உடந்தையாக வன்னியில் இருந்து செயற்பட்டவர் தான் இந்த கோபி அல்லது கஜீவன் எனத் தெரியவருகிறது.

ஏற்கனவே இது தொடர்பில் ஒருவர் தலைமறைவாகியு;ளார் என எமது இணையம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பு பட்ட செய்தி http://www.ilankainet.com/2014/03/blog-post_2838.html

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com