Wednesday, March 19, 2014

167 வாக்காளர் அட்டைகளை தீயிட்ட தபால்காரரின் தாய் ! கொள்ளையிட்டுச் சென்றதாக போலி முறைப்பாடு !!

அகுரஸ்ஸ வல்பிட பிரதேசத்தில் 167 வாக்காளர் அட்டைகளை தபாற்காரர் ஒருவரது தாய் தீக்கிரையாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை பகல் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு தொடர்பு கொண்டு தபாற்காரர் ஒருவர் வல்பிட பிரதேசத்தில் தான் தேர்தல் அட்டைகளை விநியோகம் செய்து கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் 167 தேர்தல் அட்டைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவி த்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அது போலியான முறைப்பாடு என்பதை தெரிந்து கொண்டனர். பத்துநாட்களுக்கு முன்னர் தேர்தல் அட்டைகளை விநியோகித்துக் கொண்டிருந்த நிலையில் பகல் உணவுக்காக தபாற்காரர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது மன நோயாளியான அவரது தாய் தேர்தல் அட்டைகள் உட்பட மேலும் பல கடிதங்களையும் தீக்கிரையாக்கியுள்ளார் என்பது விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்தே அவர் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு தொடர்பு கொண்டு தேர்தல் அட்டைகள் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தபாற்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com