Monday, March 24, 2014

விடுதலைப்புலி உறுப்பினர் தேவியன் மாயம்: தகவல் தந்தால் 10 லட்சம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் . விசாரணைகளுக்காக இந்நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சந்தேகநபர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நடமாடுவதுடன் கொழும்புக்கும் வந்து செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

இவர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டோ அல்லது 0112321838 என்ற தொலைநகலுக்கு தகவல் அனுப்பியோ அறியத்தரவும்.

இச்சந்தேகநபரைக் கைது செய்வதற்குரிய சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.

தகவல் தருபவர் பற்றிய விபரம் இரகசிய முறையில் பேணப்படும் என்று பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com