மகிந்தருக்கும் ரணிலாருக்குமிடையுள்ள வேறுபாடு பற்றிச் சொல்கிறார் ஹரிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவருக்கிடையிலான வேறுபாடு பற்றி, ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் விக்கிரமசிங்க தெளிவுறுத்துகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி அலுவலகங்கள் அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர்,
“ஒருநாள் நான் திருமண வைபவமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் அமர்ந்திருக்கும் போது, நம் நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அங்கு வந்தார். என்னுடன் மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களிடம் நான் இரகசியமாய் அது பற்றிச் சொன்னேன்.
ஜனாதிபதி நேராக எங்களிடம் வந்தார். வந்து இப்படிக் கேட்டார்... “ நான் வந்தது பற்றித்தானே இரகசியமாய் சொன்னீங்க..” என்று.
சற்று நேரம் கழிந்து எங்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு வந்தார். நான் அவரிடம் போய், “சர்..!” என்று கூறினேன். அதற்கு அவர் “ஹ்ம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுதான் நமது தலைவரின் நிலை.” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment