Saturday, February 8, 2014

வாள்களுடன் வைரவர் ஆலயத்தின் மடத்தில் இருந்த நால்வர் கைது!

யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று (07.02.2014) இரவு கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி குறித்த நபர்கள் மடத்தில் இருப்பதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழின் பல பாகங்களிலும் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com