Friday, February 7, 2014

அழுது கல் வடிக்கும் சிறுமி : குழம்பியுள்ள வைத்தியர்கள் –!! ( வீடியோ)

அழுகையின் போது கண்ணீர் வருவது சாதாரணமான விடயம். ஆனால் யெமன் நாட்டைச் சேர்ந்த 12 வயதான சிறுமிக்கு அசா தாரணமாக அழுதால் கண்ணீருக்குப் பதில் கல் வருகிறது. ஸாதி யாஸாலிஹ் என்ற சிறுமியின் கண்ணிலிருந்து கண்ணீ ருக்குப் பதிலாக கல் வடிகின்றது. இருப்பினும் ஏன் இவ்வாறு சிறுமியின் கண்ணிலிருந்து கல் வடிகின்றது என்பது தெரியா மல் வைத்தியர்களே குழம்பியுள்ளனர். இது ஒரு நோயா அல்லது ஏதேனும் குறைபாடா என கண்டறிய வைத்தியர்கள் முயற்ச்சிக்கின்றனர்.

இது குறித்த தகவலினை யெமன் நாட்டின் அஷால் எனும் தொலைக்காட்சியானது வீடியோ ஒன்றினை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி அழுகையில் சில மணித்தியாலங்களிலிருந்து பெறப்பட்ட கற்கள் இவை என ஒரு சிறிய பெட்டியில் கற்கள் சிலவற்றை காண்பிக்கின்றனர் வைத்தியர்கள்.

ஸாதியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினால் அச்சிறுமி வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவொரு மெஜிக்காக இருக்கலாம், பாரிய தொற்று நோயாக இருக்கலாம், பேய் பிடித்திருக்கலாம் என பலவாறு மக்கள் கருத்துத் தெரி விப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com