Wednesday, February 19, 2014

மந்திரம் செய்வதாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

மந்திர தந்திரத்தால் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தம்பகல்ல பிரதேசத்துக்கு வந்த புத்த பிக்கு ஒருவர் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

39 வயதான திருமணமாகாத பெண்ணொருவரின் நோயைக் குணப்படுத்த சாந்தி பூஜை செய்யவென வந்த பிக்கு அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று மந்திரம் செய்யும் பாவனையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் பிக்குவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய தம்பகல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com