Wednesday, February 19, 2014

பொன்சேக்காவின் அபேட்சகர் ஒருவர் கைது!

நிதி மோசடி தொடர்பிலான முறைப்பாடு ஒன்றின் பேரில், ஜனநாயகக் கட்சியிலிருந்து தென் மாகாண சபைக்குப் போட்டியிடுகின்ற அபேட்சகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெனியாய பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவரான குறித்த அபேட்சகர் ரூபா 250,000 மற்றம் ரூபா 10,000 இலான இரண்டு காசோலைகளுக்காக மோசடி செய்துள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர், ரூபா ஒரு இலட்சத்திற்கான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com