Tuesday, February 18, 2014

"த.தே.கூ வின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாமாம்". விடுக்கின்றார் முரளிதரன் வேண்டுகோள்!

பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வரும் இக்காலகட்ட த்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய்யான வாக்குறு திகளை நம்பி ஏமாந்து விடாது சிந்தித்து செயற்பட வேண் டியது சகலரினதும் பொறுப்பாகுமென பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிப்பலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான இவ்வருட அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டிப்பலை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்னம் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பட்டிப்பலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 24 கிராமசேவகர் பிரிவிற்கும் 750 வீட்டுத்திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கென வழங்கப்படவுள்ளன.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர் எமக்கு தேவையான அதிக வளங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப கூடாதென தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com