வடக்கு மாகாண ஆளுநரையோ பிரதம செயலாளாளரையோ நீக்க முடியாது – அரசாங்கம்!
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோரை நீக்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
குறித்த இருவரையும் நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மாகாண பிரதம செயலாளராக, ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி, வடக்கு மாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன் அழுத்தம் கொடுத்தார் எனினும் அதற்கு வாய்ப்பேயில்லை என்று அரசாங்கம் நிராகரித்து விட்டதுடன் அவரை, வடக்கு மாகாண முதல்வர் தமது ஆலோசகராக நியமிக்கும்படி நாம் கேட்டதுடன் ஏனைய சில நியமனங்கள் தொடர்பாகவும், வடக்கு மாகாண முதல்வரிடம் கேட்டிருந்தோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவரிடம் இருந்து இன்னமும் சாதகமான பதில் எதுவும் வரவில்லை எனக்குறிப்பிட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதன் பிரகாரம் வட மாகாணசபைக்கு ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க முடியாது ஏன் எனில் ஓய்வுபெற்றவர்கள் எவரும் ஏனைய மாகாணசபைகளில் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment