Wednesday, February 26, 2014

இனி நாங்கள் தெருத்தெருவாய் எதிர்ப்பார்ப்பாட்டம் செய்ய மாட்டோம்! ஞானசாரர்

புதுக்கதை அளக்கிறாரா ஞானசாரர்.....?

புறக்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்கும் அமைப்புக்கள் எங்களைப் போல் முதிர்ச்சியடைந்த அமைப்புக்களே அல்ல என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிடுகின்றது.

அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துரைக்கும்போது, இதற்குப் பின்னர் தங்கள் அமைப்பு வீதிகளில் அங்குமிங்குமாக பேரணிகள், போராட்டங்களை மேற்கொள்ள மாட்டாது எனக் குறிப்பிட்டார்.

பௌத்த தேரர்கள் அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என அமரபுர சத்தர்ம வங்சிக்க நிகாயா எடுத்த தீர்மானம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌத்த தேரர்களில் சிலர் மேற்கொள்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக முழு பௌத்த மதத்திற்கும் இழிவுண்டாகின்றது எனக்குறிப்பிட்ட அவர், இனிமேல் பொதுபல சேனாவினர் பக்குவப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com