Wednesday, February 26, 2014

யாழ். நாவலர் வீதியில் இளைஞரின் சடலம் மீட்பு!

யாழ். நாவலர் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் வவுனியா தோனிக்கல்லைச் சேர்ந்த கணேஸ் லெவின் ருக்சன் (வயது 25) என்ற இளைஞரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புகையிரத புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றில் வவுனியாவைச் சேர்ந்த குறித்த இளைஞர் யாழ்.நாவலர் வீதியலுள்ள மேற்படி நிறுவனத்திற்கு முன்னாலுள்ள வீடொன்றிலேயே தங்கி வந்திருந்தார். 

இவருடன் மேலும் சில இளைஞர்களும் அந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று இரவு அந்த வீட்டில் வைத்து மேற்குறித்த இளைஞர் மது அருந்தியதாகவும், இதனைத் தொடர்ந்து தங்களைத் தாக்கியதாகவும், வீட்டில் அட்டகாசம் புரிந்ததாகவும் அங்கு தங்கியிருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டினைத் தீ மூட்டியதாகவும், இதனை தாங்களே அனைத்ததாகவும் தெரிவித்துள்ள அங்கிருந்த ஏனையவர்கள், மது போதையில் நின்றிருந்த இளைஞரைத் தாம் பாதுகாப்பாக கொண்டு சென்றதாகவும், இதன் பின்னர் இன்று அதிகாலை வேளையிலேயே அவர் தூக்கில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இன்று காலை குறித்த வீட்டிற்கு முன்னுள்ள வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com