Wednesday, February 26, 2014

எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் கூட்டத்திலிருந்து வெளியேறினார் ரணில்!

ஹொரணை, குருகொட பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறினார்.

கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், மெய்ப்பாதுகாவலர் புடைசூழ அவர் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது கட்சி உறுப்பினர்கள் ஆத்திரத்துடன் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஹொரணை தேர்தல் தொகுதியிலிருந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமையின் காரணமாகவே, இவ்வாறு எதிர்ப்பு கோசங்கள் எழுப்பப்பட்டன. ஊடகவியலாளர்கள் இக்கூட்டத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.

அகலவத்த ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் காமினி நல்லப்பெருமவினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், புலத்சிங்கள ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி கஹட்டபிட்டிய இக்கூட்டத்தின் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையும், அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com