Wednesday, February 26, 2014

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து ஒரு போதும் அகற்றப்பட மாட்டார்கள் - கோட்டாபய

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து ஒரு போதும் அகற்றப்பட மாட்டார்கள் எனவும் யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தும் மேற்கு சக்திகளை திருப்திப்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் படையினரை நிறுத்துவதும் ஆயுதங்களை மீட்பதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாமென ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் அப்பகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவது உட்பட் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் அப்பகுதிகளில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இடம்பெறும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாதென பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பிக்கும் அமெரிக்கா அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் தேவைகளை மாத்திரமே கவனத்திற் கொண்டு செயல்படுகின்றது. யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான படையினர் வடக்கில்குவிக்கப்பட்டிருந்தனர். தற்போது மிக குறைந்த தொகையினரே அங்குள்ளனர். இதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா இலங்கையிளன் இராணுவத்தினரை வடபகுதியிலிருந்து அகற்றுமாறு கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com