Saturday, February 22, 2014

பாவனைக்கு உதவாத 6,500 கிலோ உருளைக்கிழங்கு புறக்கோட்டையில் மீட்பு!

கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புறக்கோட்டை நான்காம் குறுக்கு தெருப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாவனைக்கு உதவாத 6,500 கிலோகிராம் உருளைக்கிழங்குகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சுற்றிவளைப்பின் போது, பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பிரிவு இரண்டு வர்த்தக நிலையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட உருளைக்கிழங்கினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com