Thursday, February 27, 2014

ராஜரத்தினத்திடமிருந்து 3 மில்லியன் டொலர்களை பெற்று இராணுவ வீரர்களின் வெற்றியை ஏளனத்திற்குட்படுத்தியவர்தான் ரவி!

மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இராணுவ வீரர்களின் வெற்றியை ஏன் ஏளனத்திற்குட்படுத்தினார்? என கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கேள்வி யெழுப்பியுள்ளார். முஸம்மில் மன்றத்தின் ஏற்பாட்டில் கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ஏ.ஜே.எம்.முஸம்மில் இதனை தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க என்பவர் யார? இந்த கட்சியை அழித்தொழித்தவர். எமது படையினர் ஆணையிரவு செல்லும்போது பாமன் கடை சென்றார்கள் என்றும் கிளிநொச்சி செல்லும்போது மதவாச்சி சென்றார்கள் என்றும் அவர்களை தூற்றினார்கள். புலம்பெயர் தமிழர்களின் ஒருவரான ராஜரத்தினத்திடமிருந்து 3 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டு இவ்வாறு அவர் எமது படையினரை தூற்றினார்கள். அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியையும் அவர் ஏலனத்திற்குட்படுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com