குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை - வெங்கல் ஷேங்!
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரி வித்துள்ளது. அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய துணை தலைவர் வெங்கல் ஷேங்கிற்கும் இடையிலான சந்திப்பு பொருளாதார அபிவி ருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்றது. குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்தக் கவை என அவர் அங்கு தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, கிராமிய மற்றும் நகர திட்டமிடல், வேலையின்மை வீழ்ச்சி, புதிய தொழில்வாய்ப்புக்கள், போக்குவரத்து மற்றும் வீதி களின் அபிவிருத்தி சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக ஆரா யப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய நிதி வசதிகள் ஊடாக உரிய பயன் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர், படையினருக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் ஊடாக உரிய முகாமை த்துவத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதனை பாராட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவர் எதிர்காலத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க போவதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment