Sunday, January 19, 2014

வீசா வரையரைகளை மீறிய நான்கு இந்தியர்கள் பளையில் கைது!

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வியாபார நடவடிக் கைகளில் ஈடுபட்ட நான்கு இந்தியப் பிரஜைகள் பளைப்பகு தியில் வைத்து நேற்று கைதாகியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நேற்று கைதான குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வுள்ளதுடன் இவர்களிடம் இந்தச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com