Monday, January 13, 2014

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மீன்பிடி அமைச்சருடன் பேச்சுவார்த்தை- டாக்டர் ராஜித சேனாரத்ன

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய மீன்பிடி அமைச்சர் சரத் பவாருடன் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்த பேச்சுவாத்தை இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் 15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் இதில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வுள்ளதுடன் தமிழக மீனவர் சங்கங்களின்ஆலோசகர் என் . தேவதாஸ் கலந்து கொள்வுள்ளார்.

இதேவேளை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றத்திற்காக 234 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததற்காக 102 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேசமயம் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று 15 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு புதுடில்லியில் நடைபெறவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com