Monday, January 6, 2014

அமெரிக்க சர்வதேச குற்றவியல் நீதிக்கான செயலகத்தின் தூதுவர் ஜே.ரெப் வந்தடைந்தடைந்தார்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்ற வியல் நீதிக்கான செயலகத்தின் விசேட தூதுவர் ஜே.ரெப் இன்று இலங்கையை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான விசேட தூதுவர் ஜே.ரெப் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில், அரசாங்கப் பிரதிநிதிகள் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com