Tuesday, January 7, 2014

வடக்கில் இயங்கி வந்த பாதாள குழு கைது: ஆயுதங்களும் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பாதாள உலகக் குழு ஒன்றை கோப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிசார் கைது செய்துள்ளதுடன் குறித்த குழுவிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள், வாள்கள், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.

“ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்தக் கும்பலில் ஏழு பேர் அடங்குவதாகவும் இக்குழுவுக்கு குமரேசன் வினோதன் என்ற இளைஞரின் தலைமையில் இயங்கியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள் வெட்டுக்கள் வழிப்பறி கொள்ளைகள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் இந்தக் குழுவினருக்கு தொடர்புகள் இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் தற்போது இந்தக் குழவில் உள்ள ஒரு சிலர் மட்டுமே பயங்கரமான ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு சிலரை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தக் குழுவினர் சில மாதங்களுக்கு முன்னர் கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைகளை வெட்டி காயப்படுத்தியவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com