Wednesday, January 1, 2014

விபச்சார விடுதி முற்றுகை 6 பெண்கள் உட்பட எண்மர் கைது


மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று (31.12.2013) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் பன்வில, மோதரவீதி, ஆட்டுப்பெட்டித்தெரு, வௌ்ளவத்தை, களனி, வவுனியா மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என்பதடன் கைது செய்யப்பட்ட அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களை 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com