Wednesday, January 1, 2014

2 மாதமாக பெண்ணின் படுக்கையில் வாழ்ந்த மலைப்பாம்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் ராபிட்ஸ் பகுதியில் வசித்து வரும் ஹோலி ரைட் என்ற பெண் பாவித்துவந்த கட்டில் சோபாவிலிருந்து வெளிவந்த 4 அடி நீள மலைப்பாம்பு.


இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தெருவில் கிழியாமல் கிடந்த ஒரு பழைய சோபாவை கண்டதும் அதனை தூசி தட்டி தனது வீட்டிற்கு எடுத்து வந்து தனது கட்டிலில் போட்டு தினமும் அதில் அமர்ந்து, புத்தகம் படிப்பது, இமெயில் பார்ப்பது மற்றும் தனது நாய்க்குட்டியை உட்கார வைப்பது என பல வகைகளிலும் பயன்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் அந்த சோபாவில் இருந்து 4 அடி நீள மலைப்பாம்பு எட்டிப் பார்த்ததை அடுத்து ஹோலி ரைட் அதிர்ச்சி அடைந்ததுடன் சுதாரித்துக்கொண்ட அவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பெட்டியில் பாதுகாப்பாக அடைத்து வைத்துவிட்டு விலங்கியல் நிபுணரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தார் ஆனால், அதற்கு முன்பே அந்த பாம்பு இறந்துவிட்டது.

இதுபற்றி அவர் கூறுகையில் கடந்த “இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த பாம்பு வசித்திருக்கிறது அது பெரிய பாம்பு என்று சொல்ல முடியாது இருந்தும் தெருவில் இருந்து சோபாவை எடுக்கும்போது நன்றாக இருந்தது இந்த வாரம் திடீரென வெளிப்பட்டதால் மெத்தையின் ஒரு பக்க துணியைக் கிழித்து பாம்பை வெளியில் எடுத்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இறந்துவிட்டது” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com