Thursday, January 16, 2014

10 வயது சிறுமிகள் மூவரை மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்த 14 வயது சிறுவன் கைது

பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த 14 வயதுச் சிறுவனை கைது செய்ய சிலாபம் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மூன்று மாணவிகளும் பாடசாலை முடிந்ததும் மாலை வேளையில் விளையாடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அயலில் வசித்து வந்த குறித்த 14 வயது சிறுவன் அவர்களை கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

சிலாபம் - ஆராச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் பெற்றோருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com