Monday, December 2, 2013

போலி நாணயத்தாள் வழங்கி பொருட் கொள்வனவு செய்தவர் கைது!!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட் கொள்வனவிற்காக போலி நாணயத் தாளை வழங்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள் ளார்.ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கியமை தொடர்பில் வர்த்தக நிலையத்தின் முகாமையாளரால் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு ள்ளது.இதன்படி நடவடிக்கை எடுத்த கொட்டாஞ்சேனை பொலிஸார் போலி நாணயத்தாளுடன் சந்தேகநபரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com