Thursday, December 12, 2013

டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா: கடுப்பான ஒபமாவின் மனைவி!!

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண் டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை பல நாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித்,பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை பிரித்தானிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில் சோகமான சூழ்நிலையில், மூவரும் ஒட்டிக்கொண்டு கைபேசியிலேயே படம் பிடித்துக்கொண்டது பொருத்தமற்ற ஒரு செயல் என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. மற்றொரு பத்திரிகை கூறுகையில், ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாக தெரி வித்துள்ளது.



1 comments :

Anonymous ,  December 12, 2013 at 1:50 PM  

வெள்ளைகாரி என்றால் அலையிறாங்கள்......

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com