Wednesday, December 18, 2013

காணி உரிமைகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசங்கத்திற்கே உரியது: ஜனக பண்டார தென்னகோன்!

காணி உரிமைகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதி காரம் மத்திய அரசாங்கத்தின் காணி விவகார அமைச்சுக்கு உரியது என காணி மற்றும் காணி அபிவிருத்தியமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பகுதிக்காணிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் எழுப் பிய கேள்விக்கு இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் காணி உரிமைகள் தொடர்பில் மாகாண காணி ஆணையாளர்கள் தனது இறுதி முடிவு தொடர்பில் காணி அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

மேலும் 62 ஹெக்டேயர் பரப்பளவுள்ள 11 காணிகள் அனுமதிப் பத்திரம் பெற்றோருக்கும், சுவணர்பூமி திட்டத்தின் கீழ் பகிரப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் குறித்த காணிகள் காணி சட்டங்களுக்கமையவே அரச திணைக்களங்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com