"எங்கள் செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு, விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் "
அமெரிக்காவில் காணாமல் போன நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்க நாயின் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர். அமெரிக்கா வின் எலிசபெத் நகரில் வசிக்கும் தம்பதி 3 வயது நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர்.இரு வாரங்க ளுக்கு முன் அந்த நாய் காணாமல் போனது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த தம்பதி, நகரின் பல இடங்களில் தங்கள் நாயைத் தேடி அலைந்தனர்.
எனினும் எங்கும் நாய் கிடைக்கவில்லை. இந்நிலையில் 'எங்கள் செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு, விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும்´ என அந்த தம்பதி அறிவித்துள்ளனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால் அந்த நாயை தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்த்து வந்ததாகவும் நாய் காணாமல் போனதால் மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்த காரை பரிசாக பெறும் ஆர்வத்தில் எலிசபெத் நகர மக்கள் பலரும் நாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment