Monday, December 30, 2013

முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!!

முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் தொடர்பில் இந்தியா இலங் கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற் காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங் களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது.

பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம், ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.

பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக் கப்பட்டு, டிசம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளதுடன் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com