Thursday, December 12, 2013

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றார் சம்பந்தன்!!

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் பாராட்டத்தக்கவை எனவும், இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 224வது படைப்பிரிவு சம்பூர் பிரதேசத்தில் மீள்குடி யேற்றப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்த வைத்திய முகாமில் உரையாற்றும் போதே, இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, இதன்போது பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. தமிழ் மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை விமர்சித்தும், சர்வதேச அமைப்புகளுக்கு சம்பந்தனின் உரை சிறந்த பதிலடியென, இங்கு கருத்து தெரிவித்த 224வது படையணியின் தலைவர் கேர்ணல் விகும் லியனகே தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com