Sunday, December 1, 2013

அரேபிய தூதுவராலய ராஜதந்திரி தடாகத்தில் மூழ்கி மரணம்!

இலங்கைக்கான ஐக்கிய ஸவுதி அரேபிய தூதுவராலயத்தில் கடமைபுரிந்த ராஜதந்திரி பம்பலப்பிட்டி தொடர்மாடி சொகுசு கட்டடத் தொகுதியில் அமைந்திருந்த நீர்த் தடாகத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

தூதுவராலய கணக்காளரான 43 வயதுடைய தனது 15 வயது மகனுடன் அவர் தங்கியிருந்த வீட்டுத்தொகுதியில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பினாலேயே அவர் உயிர் நீத்துள்ளார் என சந்தேகிக்கப்படுகின்றது.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com