Friday, December 13, 2013

போலி ASP யும், OIC யும், கைது!! கைது செய்யப்பட்ட இருவரும் தழிழர்!

குற்றப் புலனாய்வு பிரிவின் ASP, OIC எனக் கூறி மருதானை பகுதி தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 2 லட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள னர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பதுடன் ASP என கூறியவர் கவுடான பிரதேசத்தைச் சேர்ந்த வெள்ளசாமி கிறிஸ்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வழிபாட்டு சபை ஒன்றில் பூசகராகவும் இருந்துள்ளார்.

OIC என்று கூறியவர் கொழும்பு 6, டபிள்யு ஏ சில்வா மாவத்தையைச் சேர்ந்த கனகராஜா சுஜீவகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.

1 comments :

Anonymous ,  December 13, 2013 at 2:47 PM  

இது தேவையா?
தமிழன் திருந்தவே மாட்டான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com