Saturday, December 7, 2013

5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விருது!

அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய வித்தியாலய மாணவன் ஜே. சேஷயனைப் பாராட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கினார்.

இந்த மாணவன் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வித்தியாலய அதிபர் கமல ராஜா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவென்றும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com