Friday, November 29, 2013

ரணிலில் அறைக்குள் பாம்பை விட்டது சஜித்தா?

எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் விரியன் பாம் பொன்று காணப்பட்டது தொடர்பில் எதிர்காலத்தில் கட்சித் தலைமைத்துவத்துக்கு வர விரும்பும் நபர்கள் தொடர்பில் ஐ. தே. க வுக்கு சந்தேகம் காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,எதிர்க் கட்சி தலைவரின் அலுவல கத்தில் இருந்து விரியன் பாம்பொன்று கண்டுபிடிக்கப் பட்டது. இது குறித்து விசாரணை நடத்துமாறு ஐ.தே.க சபாநாயகரிடம் கோரியுள்ளது.

ஆனால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர ஆசைப்படுபவர்களே பாம்பை இட்டதாக சந்தேகிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். எமக்கு எதிர்க் கட்சி தலைவருக்கு அநியாயம் செய்ய எந்த தேவையும் கிடையாது என்றார். சஜித் பிரேமதாஸவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உங்களைப் பற்றித்தான் கட்சிக்கு சந்தேகம் உள்ளது அண்மையில் காட்டுப் பக்கம் சென்றாரா என வினவினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com