Wednesday, November 27, 2013

மனைவி தாக்கியதில் கணவன் பரிதாபமாக மரணம்

பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெனியகொட - கெகுலுகமுவ பிரதேசத்தில் வசித்து வந்த கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது பொல்லால் தாக்கியுள்ளார். இதனால் தலையில் அடிப்பட்ட கணவர் மரணமடைந்துள்ளார்.

54 வயதான நபரே மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (26) மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (27) இடம்பெறவுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று (27) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com