Tuesday, November 5, 2013

அநுராதபுரத்தில் ஐவரின் சடலங்கள் மீட்பு!

அநுராதபுரம் - விகாரகல்மில்குளம் பகுதி வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சடலங்கள் இன்று (05) காலை மீட்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.மூன்று பெண்கள் மற்றும் 2 ஆண்களே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளனர்.மரணங்கள் குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் முதற்கட்டத்தில் இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகன் மகள் தாயின் சகோதரி அவரது மகன் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களது உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான கே.ஏ.பியதாஸ என்பவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com