Thursday, November 28, 2013

பச்சை அவரை பொதியில் பாம்பின் தலை! (படங்கள்)

கறிக்காக விலை கொடுத்து வாங்கிய பச்சை அவரை பொதியில் பாம்பின் தலைப்பகுதி இருந்ததை கண்டு பெண்ணொருவர் அதிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.இச்சம்பவம் அமெரிக்காவின் ஓரிஜியன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் வசித்து வரும் மிஸ்டி மோசர் என்ற பெண் பச்சை அவரையை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டியபோது அதில் அவரையுடன் சேர்த்து பாம்பின் தலையும் விழுவதை கண்டு அதிர்ந்துள்ளார்.

அவரையை கிண்ணத்தில் கொட்டிவிட்டு பார்க்கும்போது அதில் வாய், மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஒரு தலைப்பகுதி மட்டும் கிடப்பதை அவதானித்தேன். பின்னர் அது பாம்பின் தலை என்பதை அறிந்துகொண்டேன்' என அந்தப் பெண் கூறியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடு க்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com