Friday, November 29, 2013

கிழக்கு பகுதியில் மீனவ படகுகள் விபத்து! எட்டு பேரை காணவில்லை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. இந் நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக கிழக்கு கடற்பகுதியில் மீனவ படகுகள் இரண்டு விபத்துக்கு உள்ளானதில் மீனவர்கள் 8 பேர் காணாமற்போயுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் தெவிந்தர பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கான சென்ற படகுகள் இரண்டு படகுகளே விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை எடுத்துள்ளதுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com