Monday, November 4, 2013

லொறி மரத்துடன் மோதியதால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே பலி!

மட்டக்களப்பு–கொழும்பு வீதியில் கும்புறுமூலைப் பிரதே சத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் இறந்துள்ளதுடன், மூன்று பேர் கடுங் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கும்புறுமூலைப் பிரதேசத்தில் மரத்துடன் லொறி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக் கப்படுகின்றது.

விபத்தின் பின்னர் லொறியின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மீராவோடையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.எல். அன்வர் (32) என்பவரே ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com